சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை பண் - பஞ்சமம் (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாவீசுவரர் மின்னனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=N9VWddlaA80 |
4.060
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அணி நாவினானை, மறப்பு பண் - திருநேரிசை (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாதநாதர் மின்னனையாளம்மை) Audio: https://www.youtube.com/watch?v=pyNG2Du5jDU |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.064  
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை
பண் - பஞ்சமம் (திருத்தலம் திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) ; (திருத்தலம் அருள்தரு மின்னனையாளம்மை உடனுறை அருள்மிகு பிரியாவீசுவரர் திருவடிகள் போற்றி )
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார் கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்த பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [1] |
கருமானின் உரி உடையர், கரிகாடர், இமவானார் மருமானார், இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர், பொரு மான விடை ஊர்வது உடையார், வெண்பொடிப் பூசும் பெருமானார், பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே. | [2] |
குணக்கும் தென் திசைக்கண்ணும் குடபாலும் வடபாலும் கணக்கு என்ன அருள் செய்வார், கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும்; வணக்கம் செய் மனத்தாராய் வணங்காதார் தமக்கு என்றும் பிணக்கம் செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [3] |
இறைக் கண்ட வளையாளோடு இரு கூறு ஆய் ஒருகூறு மறைக் கண்டத்து இறை நாவர், மதில் எய்த சிலை வலவர், கறைக் கொண்ட மிடறு உடையர், கனல் கிளரும் சடைமுடிமேல் பிறைக் கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [4] |
விழையாதார், விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி; குழையாதார், குழைவார் போல் குணம் நல்ல பல கூறி; அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார் தமக்கு என்றும் பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [5] |
விரித்தார், நால்மறைப் பொருளை; உமை அஞ்ச, விறல் வேழம் உரித்தார், ஆம் உரி போர்த்து; மதில் மூன்றும் ஒரு கணையால் எரித்தார் ஆம், இமைப்பு அளவில்; இமையோர்கள் தொழுது இறைஞ்சப் பெருத்தார்; எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [6] |
மறப்பு இலா அடிமைக்கண் மனம் வைப்பார்; தமக்கு எல்லாம் சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார், ஒரு கணையால்; இறப்பு இலார்; பிணி இல்லார்; தமக்கு என்றும் கேடு இலார் பிறப்பு இலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [7] |
எரி ஆர் வேல் கடல்-தானை இலங்கைக் கோன்தனை வீழ, முரி ஆர்ந்த தடந்தோள்கள் அடர்த்து, உகந்த முதலாளா வரி ஆர் வெஞ்சிலை பிடித்து, மடவாளை ஒரு பாகம் பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [8] |
சேண் இயலும் நெடுமாலும் திசைமுகனும் செரு எய்தி, காண் இயல்பை அறிவு இலராய், கனல் வண்ணர் அடி இணைக்கீழ் நாணி அவர் தொழுது ஏத்த, நாணாமே அருள் செய்து பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [9] |
புற்று ஏறி உணங்குவார், புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் சொல்-தேற வேண்டா, நீர்! தொழுமின்கள், சுடர் வண்ணம்! மல்-தேரும் பரிமாவும் மதகளிரும் இவை ஒழிய, பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [10] |
பைம் பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி, அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் நம்பன் தன் கழல் பரவி, நவில்கின்ற மறை ஞான- சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு, அருவினை நோய் சாராவே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.060  
மறை அணி நாவினானை, மறப்பு
பண் - திருநேரிசை (திருத்தலம் திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) ; (திருத்தலம் அருள்தரு மின்னனையாளம்மை உடனுறை அருள்மிகு பிரியாதநாதர் திருவடிகள் போற்றி )
மறை அணி நாவினானை, மறப்பு இலார் மனத்து உளானை, கறை அணி கண்டன் தன்னை, கனல்-எரி ஆடினானை, பிறை அணி சடையினானை, பெருவேளூர் பேணினானை, நறை அணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே. | [1] |
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற பாதன் ஆம் பரம யோகி, பல பல திறத்தினாலும் பேதனாய்த் தோன்றினானை, பெருவேளூர் பேணினானை, ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே, | [2] |
குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்று நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர் பாகத்தானை, பிறவியை மாற்றுவானை, பெருவேளூர் பேணினானை, உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே. | [3] |
மைஞ் ஞவில் கண்டன் தன்னை, வலங்கையில் மழு ஒன்று ஏந்திக் கைஞ் ஞவில் மானினோடும் கனல்-எரி ஆடினானை, பிஞ்ஞகன் தன்னை, அம் தண் பெருவேளூர் பேணினானை, பொய்ஞ் ஞெக நினையமாட்டாப் பொறி இலா அறிவினேனே! | [4] |
ஓடை சேர் நெற்றி யானை, உரிவையை மூடினானை, வீடு அதே காட்டுவானை, வேதம் நான்கு ஆயினானை, பேடை சேர் புறவு நீங்காப் பெருவேளூர் பேணினானை, கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே. | [5] |
கச்சை சேர் நாகத்தானை, கடல் விடங் கண்டத்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, கனல் எரி ஆடுவானை, பிச்சை சேர்ந்து உழல் வினானை, பெருவேளூர் பேணினானை, இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே. | [6] |
சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள் முத்தனை, மூர்த்தி ஆய முதல்வனை, முழுதும் ஆய பித்தனை, பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணினானை, மெத்த நேயவனை, நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே. | [7] |
முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை, வண்டு உலாம் கொன்றைமாலை வளர்மதிக் கண்ணியானை, பிண்டமே ஆயினானை, பெருவேளூர் பேணினானை, அண்டம் ஆம் ஆதியானை, அறியும் ஆறு அறிகிலேனே. | [8] |
விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து(வ்) எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்; பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை மருவி, நான் வாழ்த்தி, உய்யும் வகை அது நினைக்கின்றேனே. | [9] |
பொருகடல் இலங்கை மன்னன் உடல் கெடப் பொருத்தி நல்ல கருகிய கண்டத்தானை, கதிர் இளங்கொழுந்து சூடும் பெருகிய சடையினானை, பெருவேளூர் பேணினானை, உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே. | [10] |